♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உயிரே......

நீ சுவாசித்த காற்றை மட்டுமே 
சுவாசிக்க பழகி கொண்டேன் ...., 

உந்தன் அரவணைப்பில் தான் 
நேசம் என்றால் என்ன என்று 
புரிந்து கொண்டேன்...

என்னுடன் நீ பேசிய வார்த்தைகளை
சேமித்து வைத்துக்கொண்டேன் -எந்தன்
நாட்குறிப்பின் கவிதைகளாக ...

இதனையும் செய்த என்னால் -நீ
என்னை விட்டு சென்று விடுவாய்
என சொன்ன போது

எந்தன் விழிகளில் இருந்து வந்த
கண்ணீருக்கு தடை போட தெரியாமல்
போனது ஏனோ ..??

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


No comments:

Post a Comment